Tue. May 14th, 2024

கடுப்பான சேரன், இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது -கவின் லொஸ்லியா ரசிகர்களுக்கு சுருக்கென்று பதில்

காதல் கண்ணை மறைப்பதால் அப்பா என்று உருகி உருகி பேசிவந்த இயக்குனர் சேரனை வார்தைகளால் கயப்படுத்திய லொஸ்லியா வெளியில் வந்தும் அதையே தொடர்ந்து செய்துவருகிறார். இதனால் மனம் நொந்துபோன இயக்குனர் சேரன் கடைசியாக வெளியிடுள்ள சில ட்விட்டேர் பதிவுகளில் சில தகவல்களை கவின் மற்றும் லொஸ்லியாவின் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார் . அதில் அவர் கூறியதாவது


கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு..
உங்களுக்கு பிடித்தவர்களை BB வீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.

அடுத்ததாக வெளியிட்ட பதிவில்

தகாத வார்த்தைகளால் பேசுவதால் ப்ரச்னை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை..
நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் ப்ரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.

பின்னர் வெளியிட்ட இன்னொரு ட்விட்டில்

 


கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது.
என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்.

கடைசியாக வெளியிட்ட ட்விட்டில் சொல்லியிருப்பதாவது


நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்