கச்சத்தீவுக்கு சென்றவர்கள் படகு மாயம், 100 பேர் வரையில் வரமுடியாமல் தவிப்பு
கச்சத்தீவுத் திருவிழாவுக்காகச் சென்றவர்களது படகுகள் மாயமாகியுள்ளமையால், சுமார் 100 பேர் வரை கச்சதீவில் தவித்துக்கொண்டிருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.
கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவுக்கு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்ற படகுகள் அடங்கலாக 10 படகுகள் மாயமாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த படகுகளைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், சுமார் 7 படகுகள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன எனவும் தகவல் கிடைத்துள்ளது