Tue. May 21st, 2024

ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்த ஆலோசனை வழங்குவதன் மூலம் நாட்டுக்குள் கோரோனோவை கொண்டுவர திட்டம்?

ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தினால் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் இந்த யோசனையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்தது.
எனினும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் நாடு தழுவிய முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் குறித்த முடக்கம் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல் கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்