Fri. May 17th, 2024

ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளை-சாவகச்சேரியில் சம்பவம்

ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிகாரிகளிடம் விசாரணைகள் சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்