ஊரடங்கு நேரத்தில் கணவன்- மனைவி முரண்பாடு அதிகரிப்பு பலர் வைத்தியசாலையில்
ஊரடங்கு நேரத்தில் கணவன்- மனைவி முரண்பாடு அதிகரிப்பு பலர் வைத்தியசாலையில்
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலத்தில் குடும்பத் தகராறு காரணமாக பல குடும்பத் தலைவிகள் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதிய பொறுப்பு உத்தியோகத்தர் புஸ்பா ராமியானி டி சொய்யா தெரிவித்துள்ளார்.
வழமையாக விபத்து சிகிச்சை பிரிவில் நாளாந்தம் 250 பேர் சிகிச்சைக்குள்ளாவர். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் 66 பேர் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் குடும்பத் தகராறு காரணமாக விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.