ஊரடங்கு தளர்வு நேரத்தில் முண்டியடிக்கும் மக்கள், கோரோனோ பரவும் அபாயம்
இன்று மதியம் 12 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்களை கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தவண்ணம் உள்ளனர். அறிவித்தும் மாஸ்க் அணியாது மரக்கறிகளை கொள்வனவு செய்தனர்