Fri. May 17th, 2024

ஊரடங்கு உத்தரவை  மீறிய 261 பேர் இன்று  கைது 

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்,  இன்று காலை ஆறு மணி முதல் மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன்,குறித்த ஆறு மணித்தியால காலப்பகுதியில் 96 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று மதியம் ஒரு மணி வரையான காலப்பகுதியில் ஏழாயிரத்து 619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை ஆயிரத்து 864 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்