உலக தமிழ் பூப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் பூப்பந்தாட்ட போட்டிகள்
உலக தமிழ் பூப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களிற்கான பூப்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் 30, 31, 01ம் திகதிகளில் கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் 30ம் திகதி 14, 16, 20 ஆண்கள் பெண்களிற்கானமதும் திறந்த வயதுப் பிரிவினருக்கான இரட்டையர் ஆட்டமும் நடைபெறும், 31ம் திகதி திறந்த வயதுப் பிரிவினருக்கான ஒற்றையர் ஆட்டமும் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களிற்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டமும் 1ம் திகதி 12 வயதுப் பிரிவினருக்கான ஆட்டமும் கலப்பு இரட்டையர் ஆட்டமும் இடம்பெறவுள்ளது.