Sun. May 19th, 2024

இளைஞர்களின் கண்மண் தெரியாத ஓட்டத்தால் 3 உந்துருளிகள் மோதி விபத்து: 4 பேர் காயம்

யாழ்.புத்துார் சந்தியை அண்மித்த பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, இரு மோட்டார் சைக்கிள்களில் மிகை வேகமாக வந்த இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், இரு இளைஞர்கள் மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்