Tue. May 21st, 2024

இலவசமாக முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் யாழ் மாநகரசபை உறுப்பினர்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனின் முயற்சியில் நகரில் கூடும் பயணிகளிற்கு இலவசமாக முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்வு 17/3/3020 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாநகர சபை உறுப்பினரின் சொந்த நிதியில் இருந்து மக்களை விழிப்பூட்டி சுகாதார நடவடிக்கையில் வழிகாட்டுவதோடு ஏனைய உறுப்பினர்களும் இந்த செயல்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் ஆயிரம் முகக் கவசங்கள் தயாரித்து விநியோகிக்கும் பணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக 150 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அவற்றை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் வழங்கி வைத்தார்.

இதன்போது குடாநாட்டில் இருந்து பிற மாவட்டங்களிற்கு பயணிக்கும் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரான பேருந்து நடத்துநர்கள் , சாரதிகள் , பயணிகளிற்கும் மற்றும் பாதசாரிகளிற்கும் வழங்கப்பட்டன.

இதன்போது மாநகர சபை உறுப்பினர்களான ம.அருள்குமரன் , ப.தர்சானந் ஆகியோரும் உடனிருந்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்