இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் நடாத்தும் ஏ.ஆர். சிவகுரு தாத்தா ஞாபகார்த்த தலைவர் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திக்கம் இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதியாட்டத்தில் அல்வாய் நண்பர்கள் அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதவுள்ளது.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தலைவர் மா.நவநீதமணி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலக செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, சிறப்பு விருந்தினராக கப்பல் கப்டன் சிவகுரு பாஸ்கரன், கெளரவ விருந்தினராக திக்கம் இளைஞர் விளையாட்டு கழக தலைவர் ரி.விதுசன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்னர்.