இன்று முதல் ஓய்வூதியர்களுக்கு இலவச புகையிரத பயணசீட்டு
ஓய்வு பெற்றவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டைகளை ரயில் நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை இலவசமாகப் பெற முடியும்.
கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள தொடக்க விழாவைத் தொடர்ந்து இந்த திட்டம் இன்று (19) முதல் அமலில் இருக்கும் என்று தெரியவருகிறது.
போக்குவரத்து சேவை மேலாண்மை அமைச்சர் மஹிந்த அமரவீராவின் தலைமையில் கீழ் இந்த நிகழ்வு நடைபெறும்.
இந்தத் திட்டத்தை இலங்கை ரயில்வே மற்றும் ஓய்வூதியத் திணைக்களம் என்பன கூட்டாக வழிநடத்துகின்றன.