இதுவரை 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் சென்னையில் இருந்து வருகை தந்தவர் எனவும் அவர் கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
அதன்படி இதுவரை 937 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் இதுவரை 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 408 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்