Mon. May 20th, 2024

இடுகாட்டில் நினைவுக்கல்வெட்டுக்கள் சேதப்படுத்திய சந்தேகத்தில் ஐவர் மானிப்பாய் பொலிஸாரல் கைது

நவாலி அமெரிக்க மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவுக்கல்வெட்டுக்கள் சேதப்படுத்திய சந்தேகத்தில் ஐவர் மானிப்பாய் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பயனாகவே ஒரு கும்பலைச் சேர்ந்த ஐவர் அவ்விடத்திற்கு அருகாமையில் இருந்து கள்ளு குடித்து விட்டு சேதப்படுத்தியமை தெரிய வந்துள்ளது.

இதில் மூவர் கிறிஸ்தவர்கள் எனவும் இருவர் இந்துக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்