Fri. May 17th, 2024

ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அது நம் நாட்டில் சாத்தியமானதா?

நாங்கள் உள்ளெடுக்கும் உணவுடன் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களையும்  அதிகளவில் உள்ளெடுத்து கொண்டிருக்கின்றோம். இரசாயன நிறுவனங்கள் தங்களது இலாபத்தை மாத்திரமே கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட இரசாயனங்களையும் கலந்து புது வகையான பூச்சி நாசினிகள், களை கொல்லிகள் மற்றும் பீடை கொல்லிகளை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. தடை செய்யப்பட்ட இரசாயண மூலக்கூறுகள் நீண்டகாலத்திற்கு பிரிகை அடையாது சுற்றுப்புற சூழலில் இருக்கும் என்றும், மனிதர்களுக்கு மிகவும் நச்சுத்தன்மையானது என்றும், மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவிலும் தண்ணீரிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இரசாயனங்களின் எச்சங்கள் (pesticide residues) இருக்க கூடாது என்றும் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) வலியுறுத்திகிறது. இந்த இரசாயனங்களால் என்னென்ன பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும், எந்த இரசாயனம் எந்த பயிருக்கு ஏற்றது, எந்த காலத்தில் எத்தனை தடவைகள் அதனை பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்காது, நமது விவசாயிகள் இரசாயன நிறுவனங்களால் காட்டப்படும் போலியான விளம்பரங்களால் கவரப்பட்டு தங்களது பயிர்களுக்கும் தமது விளைநிலங்களுக்கும் அளவுக்கும் அதிகமாக இரசாயனங்களை பாவிக்கிறார்கள்.

 

 

 

இவ்வாறு அதிகளவில் பாவிக்கப்படும் இரசாயனங்கள் உண்ணும் உணவுகள் மூலமும், நிலத்தடி நீர் மூலமும், சுவாசிக்கும் காற்று மூலமும் நம்மிடம்தான் இறுதியில் வந்தடைகின்றது. இதனால் தான் புது புது வியாதிகளும், நம்ம ஊர் மருத்துவர்களின் பொருளாதார நிலையும் அதிகரிக்கின்றது. சில மேலைத்தேச நாடுகளில் விவசாயத்தில் இரசாயன பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் குறிப்பிட்ட வகையான, பாதுகாப்பான இரசாயனங்களை பாவிப்பதற்கே அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளிக்கிறது. அனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எந்த கட்டுப்படும் இல்லை. எல்லா இரசாயன நிறுவனங்களும் தங்களது இரசாயனங்களை இங்கே கொண்டு வந்து சந்தை படுத்தலாம். விவசாயிகள் இவற்றை வாங்கி தாங்கள் விரும்பும் அளவில், விரும்பும் வேளையில் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இரசாயனங்களால் நஞ்சுட்டப்பட்ட உணவுகளை உண்ணும் நீங்கள் மெல்ல மெல்ல உயிரை விடலாம் அல்லது நேரடியாக அருந்துவதன் மூலமும் உயிரை மாய்க்கலாம். இதற்க்கு நமது அரசாங்கம் எந்த விதத்திலும் தடை சொல்லாது, பொறுப்பும் ஏற்காது. அவர்களது பதவியும், சுகவாழ்வும் தான் முக்கியம். இவற்றிற்க்காக அவர்கள் பரந்த மனதுடன் எல்லாரும் வாருங்கள் உங்கள் குப்பைகளை நம் நாட்டில் கொட்டுங்கள் என்றிருப்பார்கள்.

 

 

இரசாயனத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்து சொல்லும் இடத்தில் இருக்கும், மக்களால் கடவுளுக்கு மேலாக நம்பப்படுகின்ற நம்ப ஊர் மருத்துவர்களும் வாய் மூடி மௌனியாகவே இருக்கிறார்கள். இது அவர்கள் வருமானத்தில் கை வைக்கும் செயலல்லவா. அவர்கள் எவ்வளவு அறிவாளிகள், யானை போல் தன் தலையிலையே மண்ணை போடுவார்களா?

மக்களே, பணம் விழுங்கும் முதலைகளை நம்பி நோய் வந்த பின்பு அவர்களுக்கு இலச்சங்களில் வாரி இறைப்பதற்கு பதிலாக எவ்வாறு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் வழிகளை பின்பற்றலாம் என்று பாருங்கள். அவைதான் உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் பாதுகாக்கும்.

அடுத்து வரும் பகுதியில் இரசாயனங்கள் இல்லாத ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும்  வழிகளையும், இயற்கை முறையில் இரசாயனங்களை பவிக்காது உங்களது வீட்டிலேயே பயிர்களை பயிரிடும் முறைகளையும் ஆராய்ச்சி கட்டுரைகளில் இருந்தும் எங்கள் பாரம்பரிய முறைகளில் இருந்தும் நான் அறிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன். உங்களிடம் இருந்தும் உங்கள் கருத்துக்களையும், குறிப்புகளையும் எதிர்பாத்து நிற்கின்றேன். உங்கள் குறிப்புகளும் இங்கே பகிரப்படும். ஒரு ஆரோக்கியமான நோயற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

 

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”.

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்