ஆட்டநிர்ணயம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக சங்கக்கார அமைச்சில் முன்னிலை
வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார இன்று (02) காலை விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு வந்துள்ளார்.
முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே 2011 ஐசிசி உலகக் கோப்பையின் இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் தொடர்பாக குற்றம் சுமத்தியிருந்தார்.
குமார் சங்கக்காரர் அந்த ஆட்டத்தின் இலங்கை கேப்டன் ஆக இருந்தார் . முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருது தெரிவித்த சங்கக்கார ,முன்னாள் அமைச்சர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) ஆதாரங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .