அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (13.08.2020) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (13.08.2020) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் நடைபெற்ற 9 ஆவது நாடாளுன்றத் தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற பொதுஜன பெருமுன, ஈ.பி.டி.பி போன்ற பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்துள்ளது.
அதனடிப்படையில், நேற்று (12.08.2020) தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கி வைத்தார்.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றையதினம் புதன்கிழமை மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை பெருத்த எதிர்பார்ப்புடன் அமைச்சு பதவி கிடைக்கும் என்று சென்ற அங்கஜன் பதவி ஏதும் வழங்காத நிலையில் ஏமாற்றம் அடைந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்