அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி உரும்பிராய் பைங்கரன் அணி சம்பியன்
கோப்பாய் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் உரும்பிராய் பைங்கரன் அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் உரும்பிராய் பைங்கரன் அணியை எதிர்த்து உரும்பிராய் ஒஸ்கா அணி மோதியது.
இதில் உரும்பிராய் பைங்கரன் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25:18, 25:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாகியது.