அந்த பழக்கம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. மனிஷா கொய்ராலா
தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் பம்பாய், சங்கர் இயக்கத்தில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களும் இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களிலும் சிறப்பான நடிப்பை மனிஷா கொய்ராலா வெளிப்படுத்தினர்.
ஆனால் தற்போது புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டெழுந்து வந்துள்ளார்.
ஒரு ரோஜா கருகி அதன் நிறம் மாறும் என நினைத்து கவலைப்பட்டேன். ஆனால் நான் சீக்கிரம் நலமடைந்து விட்டேன்.
எனது சிறுவயதில் ஏற்பட்ட மது அருந்தும் பழக்கமே எனது புற்றுநோக்கு காரணம். இதனை வெளிப்படையாகச் சொல்கிறேன். நான் இறந்தாலும் எனது நடிப்பை மக்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.