Fri. May 17th, 2024

அதிகாலை சொகுசு பஸ் விபத்தில் ஓமந்தையில் 18 பேர் காயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டியொன்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.எதிரில் வந்த பார ஊர்தியுடன் விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக பஸ் வண்டியின் நடத்துனர் தெரிவித்தார். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்