Tue. May 14th, 2024

அடங்காத லொஸ்லியா, அடக்க முயற்ச்சிக்கும் லொஸ்லியா அப்பா

இன்றைய பிக் பாஸ் முதலாவது பிரோமோவில் தர்ஷனும், கவினும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே வருகிறார்கள். பிக் பாஸ் வீடே சந்தோஷமாய் இருக்குது . ஒருத்தரை ஒருத்தர் கட்டி பிடிக்கிறாங்க, தூக்கிக்கிறாங்க எல்லோருமே மகிழ்ச்சியாய் இருக்கிறாங்கள். இதெல்லாத்துக்கும் நடுவில டைரக்டர் மணிரத்தினத்தின் டைரெக்ஷனை எல்லாம் மிஞ்சுற அளவுக்கு ஒரு லவ் ஸ்டோரி போகுது. கவினும் லொஸ்லியாவும் கண்ணாலையே பேசிக்கிறாங்க. லொஸ்லியா தனது காதலனை பார்த்து மெய்மறந்து நிக்கிறார். லொஸ்லியாவின் இந்த பார்வையை வைரலாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள். கவினை பார்த்த பின்புதான் லொஸ்லியா முகத்தில் சந்தோஷம் தெரிகின்றது என்றும் கூறிவருகின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் லொஸ்லியா அவர் அப்பாவுடன் பேசுவது காண்பிக்கப்பட்டுள்ளது. வீடியோ வாயிலாக தனது அப்பாவிடம் பேசும் லொஸ்லியா, ஹலோ அப்பா.. என்கிறார். எப்படி இருக்கிறாய் என்று கேட்கும் அவரது அப்பா, சந்தோஷமாய் இரு.. இப்போது இருப்பது போலவே இரு என்று கூறுகிறார்.தொடர்ந்து பேசும் லொஸ்லியா, அப்பா சாரி.. எதுவும் நினைக்காதீங்க.. வெளியே வந்து நான் எல்லாம் சொல்கிறேன். இப்போ அவ்ளோதான் சொல்வேன் என்று கூறுகிறார். தனது மகளை பார்த்து மரியநேசனும் அப்பாவை பார்த்து லொஸ்லியாவும் கண்ணீர் விடுகின்றனர். இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த லொஸ்லியாவின் அப்பா, அவரிடம் கடுமையான கோபத்தை காட்டினார். கவினை தனது மகள் காதலிப்பதை விரும்பாதவர், மகளை கடுமையாக கண்டித்தார். ஆனாலும் அடங்காத லொஸ்லியா கவினை தொடர்ந்து காதலித்து வருகிறார்.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவுடன் கவின் இல்லாமல் இருப்பதை லாஸ்லியாவின் அப்பா விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“அப்பாவை மதிக்கும் எந்த பிள்ளையும் அவரின் அறிவுரைக்கு பின்னும் இப்படி செய்யாது. பெற்ற தந்தை தாயைவிட உலகத்தில் யாரும் உனக்கு நல்லதை நினைக்க முடியாது லொஸ்லியா.. உனது அப்பா மிக சிறந்த மனிதர்” என்று கூறுகிறார் ஒரு நெட்டிசன்.

இந்த பொண்ணு அப்பா அம்மா சொல்லு கேக்கிற பொண்ணு மாதிரி தெரியேல்லையே. லொஸ்லியா அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருந்த பொது கமல் சார் முன்னுக்கு நீ கால்மேல கால் போட்டு இருக்கிறாய் மற்ற போட்டியாளர் எல்லாம் என்ன மரியாதையா இருக்கிறாங்கள் அப்பிடி நீ இருக்காதே என்று கூறினார். அதற்கு மரியாதை எல்லாம் என் மனசில இருக்கு என்று திமிராக கூறினார். இதையே தான் கமலஹாஷனிடமும் கூறினார். ஒரு சின்ன விடயத்திற்கே தன்னை மாத்திக்கொள்ளாத பொண்ணா அப்பா அம்மா சொல்லு கேக்கபோகுது. அவ அப்பா அம்மா தான் தங்களை மாத்திக்கணும் என்று இன்னொருவர் சொல்கிறார்.

இந்த பொண்ணு இலங்கையிலை இருந்து எதுக்கு போய் நம்ம மானத்தை வாங்குது என்று நம்ம ஊர்கரங்கள் தலையிலை அடிச்சிக்கிறாங்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்