Thu. May 16th, 2024

அஞ்சல் வாக்குகளில் சஜித் பின்னடைவு , 2015 தேர்தல் போலவே மீண்டுவருவார் என்கிறார் கட்சியின் பிரமுகர்

திரு அஞ்சல் வாக்குகளை இழந்தாலும் சஜித் பிரேமதாச தேர்தலில் வெல்வார் என்று கட்சியை சேர்ந்த ஷிரால் லக்திலக கூறினார்

மேலும் தெரிவித்த அவர் 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் மைத்ரிபால சிறிசேன தபால் மூல வாக்குகளில் பின்னிலையில் இருந்தே பின்னர் முடிவில் தேர்தலில் வென்றார் என்றும் அவர் கூறினார் . இதே போலவே சஜித் பிரேமதாசாவும் வெல்வார் என்று அவர் மேலும் தெரிவித்தார்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் அஞ்சல் வாக்கு மூலம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றும் அவர் கூறினார்.

அஞ்சல் வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டார் என்ற அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்