அச்சுவேலி நெசவு தொழிற்சாலையில் 25 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்
சுவிஸ் நாட்டில் இருந்து வந்த போதகரின் வழிபாட்டில் கலந்துகொண்டனர் என சுமார் 25 பேரை அச்சுவேலி நெசவு தொழிற்சாலையில் பொலீஸ் காவலில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு சொந்தமான நெசவு தொழிற்சாலை கட்டடத்தில் கிறிஸ்தவ ஒரு சபையினர் முற்றுகையிட்டு தமது ஆராதனையை மேற்கொண்டு வந்துள்ளனர். இச்சபையினரின் வழிபாடு அப்பகுதி மக்களுக்கு பொருத்தமற்றதாகவும் அதிக ஒலி எழுப்புவதாலும் மன உளைச்சலுக்கு உருவாகிய அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் எவ்வித பயனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அந்த இடத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட 25 பேரை அச்சுவேலி நெசவு தொழிற்சாலையில் பொலீஸ் காவலில் தனிமைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.