Sun. May 19th, 2024

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மருதனார்மடம் பகுதியில் சந்தை வியாபாரத்தில் ஈடுபடும் பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளார். இதனையடுத்து குறித்த பெண் அச்சுவேலி கதிரிப்பாய் வாகையடி பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டுக்கு வந்து சென்றுள்ள நிலையில், சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய 38 குடும்பங்கள் இன்று  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் உள்ள பாடசாலைகள் பலவற்றிற்கு இன்று மாணவர்கள் பலர் சென்றுள்ளனர்.  இதன் பின்னரே பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்களை தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்