கொரோனாவினால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மதுரையைச் சேர்ந்த ராஜாஜி (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் நீரிழிவு, நுரையீரல் பிரச்சனை, உயர்குருதியமுக்கம் போன்றவற்றினால் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளதாக விஜயபாஸ்கர் தனது கட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.