Fri. May 17th, 2024

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை அரசர்கேணி மற்றும் கிளாலி பகுதிகளில் வாழ்கின்ற 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பிலேயே இக்குடும்பங்களுக்கான பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றினை சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் செ.மயூரன் மற்றும் சாவகச்சேரி நகராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து குறித்த பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்