Sun. May 19th, 2024

காதலிக்கு பெற்றோல் ஊற்றிய காதலன் 

கேகாலையில் வீடொன்றின் ஓடு பிரித்து, உறங்கிக் கொண்டிருந்த காதலிக்கு பெற்றோல் ஊற்றி தீமூட்டிய முன்னாள் காதலனை பொலிசார் தேடி வருகின்றனர்.
அலதவல, நீலபால கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
வீட்டில் உறக்கத்தில் இருந்த 20 வயது யுவதியே பெற்றோல் ஊற்றி தீமூட்டப்பட்டுள்ளார்.
நள்ளிரவு நேரம் வீட்டின் ஓட்டை கழற்றி, அதன்மூலம் பெற்றோல் ஊற்றி, யுவதி தீமூட்டப்பட்டுள்ளார்.
பலத்த தீக்காயங்களுக்கு ஆளான யுவதி தற்போது கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்