31ம் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
தோற்றம்
6 October, 1981மறைவு
10 October, 2020லிங்கோற்பவநாதர் - ரவிசங்கர் (பபி) (வயது : 39)
பிறந்த இடம்
கட்டுவன்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
நன்றி மறவோம்!
நாளும் நினைவோம்!
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய் பிரகாசித்து, எம்மையெல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்த எங்கள் அன்புச் செல்வன் அமரர். லிங்கோற்பவநாதர் – ரவிசங்கர் (பபி) அவர்களின் மரணச் செய்தி அறிந்தவுடனே லண்டனில் உள்ள அவரில்லம் விரைந்து சென்ற அன்புக்குரியவர்களுக்கும், இறுதிக் கிரியைகளுக்கான சகல ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கும், தொலைபேசி, இணையம் ஊடாக தொடர்பு கொண்டு அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், முக நூலில் ரவியைப் பற்றி எழுதியோருக்கும், மலர் வளையங்கள், மலர் அஞ்சலி செலுத்திய அன்புள்ளங்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் அனுப்பியோருக்கும், அஞ்சலி உரைகளை ஆற்றியோருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் சிந்திய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
17.10.2020 அன்று Zoom Conference ஒன்றை ஒழுங்கு செய்து அதில் பலர் பங்கு கொண்டு அவரைப் பற்றி பலரும் அறியும்படி செய்த உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
நாயன்மார்கட்டில் உள்ள எமது இல்லத்திற்கு வந்து அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறி, தேவையான உதவிகளையும் செய்த உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும், 16ம் நாள் அந்தியேட்டி வரை அயராது உழைத்த அன்புள்ளங்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.
எங்கள் அன்புச் செல்வன் நோயுற்று இருந்த வேளையில் வைத்திய ஆலோசனை வழங்கி சிகிச்சை மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், தாதியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது ரவியின் (பபி) ஞாபகார்த்தமாக ஒரு தொகை நிதியை அவரது குடும்பத்திற்கு அன்பளிப்பாக அளித்த நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பில் அன்பார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர்
லி.சிவசங்கர்,
236, செம்மணி வீதி,
நாயன்மார்கட்டு,
நல்லூர்.