Thu. Mar 28th, 2024

1ம் ஆண்டு நினைவஞ்சலி திதி: 28-04-2022

தோற்றம்

1940-02-27

தோற்றம்

27 February, 1940

மறைவு

9 May, 2021

தையல்நாயகி கந்தையா (வயது : 81)

பிறந்த இடம்
ஞானியார் வளவு, வதிரி
வாழ்ந்த இடம்
வதிரி வடமராட்சி

மறைவு

2021-05-09

அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்! அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே! அன்பால்
என்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சைவிட்டு…
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்….தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை…

சந்திரனில்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை மந்திரி இல்லா வேந்தன் மதகரி இல்லா சேனை போல……இந்திரகிரியும் இன்றெம்மோடு இந்நிலைக்காளானதே உங்களை இழந்ததாலே இனியென்ன செய்வோம் நாமே

சந்ததமும் உம் நினைவு சாகாத நம் நினைவே…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்

Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு