மரண அறிவித்தல்
தோற்றம்
3 March, 1976மறைவு
25 November, 2021திருமதி. குகன் கலைவாணி (வயது : 46)
பிறந்த இடம்
நீர்வேலி வடக்கு
நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்
நீர்வேலி வடக்கு நீர்வேலி
நீர்வேலி வடக்கு நீர்வேலி
மரண அறிவித்தல்
பிறப்பு 03.03.1974
இறப்பு 25.11.2021
அமரர்.திருமதி.குகன் கலாவாணி (வாணி)
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குகன் கலாவாணி ( வாணி ) அவர்கள் நேற்று முன்தினம் (25-11-2021) வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன் கலாநிதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவங்களான அற்புதநாதன் மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற குகன் அவர்களின் அன்பு மனைவியும், சுஜாணன் ( மாணவன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு தாயாரும், ஜெயகாந்தன் (T.O, நகரசபை, பருத்திதுறை), கலையரசி, கலைச்செல்வி , தயாபரன்(T.O, RDA, பருத்தித்துறை) , தினேஸ்குமார் ( wildlife department ) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாமலோஜினி ( RDHS ), பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற விமலராசன், மற்றும் சுஜிதா, ஜெகதீசன், ரமேஸ்வரன் (C.T.B), ஜெகாஜினி (ஆசிரியை வ/றம்பைக்குளம் ம.வி), அஜந்தா (தாதிய உத்தியோகத்தர், பூநகரி பொது வைத்தியசாலை ) ஆகியோரின் மைத்துனியும், அக்சன் , பிரஜித் , மதுமிரா , லிர்த்திகா,
லிபிக் ஷன் ஆகியோரின் அத்தையும், அபிஷனா, கெளசிகன், நிருசனா ஆகியோரின் பெரியம்மாவும், அருந்தவநேசன், கருணாநிதி , வைத்திநாதன் – ஆனந்தநிதி தம்பதியினரின்
பெறாமகளும், நவஜீவன், சங்கீதா , றஜீவிதன் , கஸ்தூரி, தராகுலன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28-11-2021) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும், இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சகோதரன்
பரமேஸ்வரன் ஜெயகாந்தன்
சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலி .
0775561605
தொடர்புகளுக்கு
ஜெயகாந்தன் (சகோதரன்)