Sat. Apr 20th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1942-03-13

தோற்றம்

13 March, 1942

மறைவு

11 October, 2021

திரு. சுப்பிரமணியம் தங்கராசா (ஓய்வு பெற்ற பிரபல கணித ஆசிரியர், உப அதிபர்) (வயது : 80)

பிறந்த இடம்
வதிரி புஸ்பகாமாலை
வாழ்ந்த இடம்
வதிரி தங்கநிலா

மறைவு

2021-10-11
வதிரி புஷ்பமகாலையைப் பிறப்பிடமாகவும், வதிரி தங்கநிலாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கராசா அவர்கள் இன்று (11.10.2021) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்- தமயந்தியம்மா தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான தர்மராசா மேனகையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் திருமதி.த.தர்மதேவி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ரமணன், லக்ஸ்மன் (மதுவரி உத்தியோகத்தர்), விமலன் (ஆசிரியர், யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை) ஆகியோரின் அன்புத்தந்தையும், அஜந்தா (ஆசிரியை) ஜயதா (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெயசீலன் ரம்மியா (ஆசிரியை), தயாளன் லக்ஸ்மியா (மருந்து கலவையாளர்), அகிலன் விமல்யா (தேசிய சேமிப்பு வங்கி) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் அஸ்வின், கிரித்திக், கிருவிந், ஆதிரா, கேமிதன், கிரிஸ், மதுஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் தர்மசிகாமணி, காலஞ்சென்ற புஸ்பராசன், இரத்தினசேகரன், புனிதசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் தவராசா (ஓய்வு நிலை ஆசிரியர்), பாலேந்திரம் தவமணிதேவி, கௌரிபாலன் தவமலர், புஸ்பராசன் தீபமலர், சீவரத்தினம் தேவிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற மு.தங்கவேல், க.பாலசுப்பிரமணியம், இரத்தினசிங்கம் செல்வரத்தினம், முருகநாதன் செல்வமலர் ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (12.10.2021) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்  தகனக்கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தங்கநிலா,
வதிரி.
Share This:

தொடர்புகளுக்கு

விமலன்

பிரிவுத்துயர் பகிர்வு