Wed. Apr 24th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1955-01-26

தோற்றம்

26 January, 1955

மறைவு

28 March, 2021

திரு சுப்பையா நந்தகுமார் (ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் மாகாண திறைசேரி, வடமாகாணம்) (வயது : 66)

பிறந்த இடம்
தம்பசிட்டி பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
தென்புலோலியூர் சின்னத்தாய்

மறைவு

2021-03-28
தம்பசிட்டி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் தென்புலோலியூர் சின்னத்தாயை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பையா நந்தகுமார் அவர்கள் இன்று (28.03.2020) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் சுப்பையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,  சதாசிவம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  செல்வராணி (இளைப்பாறிய பிரதம முகாமைத்துவ உதவியாளர் பிரதேசபை, பருத்தித்துறை) அவர்களின் அன்புக் கணவரும், வினோத் (பொறியியலாளர்), விவேக் (பொறியியலாளர்), மனோஜ் (மொறட்டுவ, பல்கலைக் கழக இறுதியாண்டு மாணவன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்  வி.சுவேந்திரநாயகி, சு.கந்தகுமார் (அவுஸ்ரேலியா), சி.இந்திரகுமாரி, சு.உதயகுமார் (அவுஸ்ரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரரும், ச.அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (29.03.2021) திங்கட்கிழமை முற்பகல் 6.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

வினோத்
விவேக்
மனோஜ்

பிரிவுத்துயர் பகிர்வு