மரண அறிவித்தல்
தோற்றம்
27 June, 1942மறைவு
6 January, 2021திருமதி கணபதிபிள்ளை புவனேஸ்வரி (வயது : 79)
முல்லைத்தீவு
குமுழமுனை
முல்லைத்தீவு உண்ணாப்பிலவைப் பிறப்பிடமாகவும் குமுழமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிபிள்ளை புவனேஸ்வரி நேற்று (06.01.2021) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற சபாபதி மீனாட்சி தம்பதியரின் மூத்த மகளும், பொன்னையா கணபதிபிள்ளையின் அன்பு மனைவியும், கெங்காதரன், பாரதா, சித்திரா, சுபத்திரா, துஸ்யந்தன், முரளிதரன், யசோதரா, திபாகரன், பகீரதன், சிகாதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (07.01.2021) வியாழக்கிழமை குமுழமுனையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக குமுழமுனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.