மரண அறிவித்தல்
தோற்றம்
12 April, 1950மறைவு
21 November, 2020சுப்பிரமணியம் தவமணி (கமலாதேவி) (வயது : 71)
யாழ் நீர்வேலி
யாழ் நீர்வேலி
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் தவமணி அவர்கள் இன்று (21.11.2020) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகவடிவேல் இரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், துஷிதா (பட்டதாரி பயிலுநர், வலி.வடக்கு பிரதேச செயலகம் கோப்பாய்) அவர்களின் பாசமிகு தாயாரும், ஜெயதீபன் (ஆசிரியர், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான இராசசேகரம், தேவதாஸ், தெய்வசிகாமணி, மற்றும் பத்மாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதுஷிகா, சதுஷிகா, ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.11.2020) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 9.30 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.