மரண அறிவித்தல்
தோற்றம்
3 October, 1955மறைவு
8 October, 2020திரு.உருத்திரசிங்கம் துரைசிங்கம் (வயது : 65)
பிறந்த இடம்
வடலியடைப்பு
வடலியடைப்பு
வாழ்ந்த இடம்
வடலியடைப்பு
வடலியடைப்பு
வடலியடைப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரசிங்கம் துரைசிங்கம் (யாழ்ப்பாணம் சிவசக்தி கடைச்சல் தொழிலக முன்னாள் உரிமையாளர்) அவர்கள் நேற்று முன்தினம் (08.10.2020) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் உருத்திரசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுக்கரசு நாகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும், அற்புதராணியின் அன்புக் கணவரும், பிரதீப் அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற நாகேஸ்வரி, இரத்தினசிங்கம் (கனடா), தர்மகுலசிங்கம் (கொழும்பு), யோகேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற சபாநடேசன் (சக்திவேல் தொழிற்சாலை), நிர்மலானந்தன் (ஜேர்மன்), திலகவதி, சுகிர்தவதி, கலாவதி (அவுஸ்ரேலியா), லிங்கேஸ்வரன் (சுவிஸ்), தேவகனி (பிரான்ஸ்), வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவசுப்பிரமணியம் காலஞ்சென்ற பொன்னம்பலம் கணேசன் மற்றும் புஸ்பராணி, சண்முகசுந்தரம், இந்திரராசா (சுவீடன்), செல்வராணி (ஜேர்மன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (10.10.2020) சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அரசடி வீதி, வடலியடைப்பினில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்