மரண அறிவித்தல்
தோற்றம்
5 July, 1962மறைவு
6 April, 2020சந்திரமூர்த்தி செல்வக்குமார் (வயது : 58)
பருத்தித்துறை
பருத்தித்துறை
கந்த உடையார் ஒழுங்கை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமூர்த்தி செல்வக்குமார் இன்று(06.04.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சந்திரமூர்த்தி மற்றும் சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், அபராஜிதன் (கம்போடியா), பிருதிவிராஜன், கோடீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தமிழரசி அவர்களின் அன்பு மாமனாரும், மாலதி (ஜேர்மனி), சுகந்தி (ஜேர்மனி), காலஞ்சென்ற ஆதித்தகுமார் மற்றும் திருமகள் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கனகசபை சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும், ரவிவர்மா, காலஞ்சென்ற ரவிவர்மன் மற்றும் திவ்யா (ஜேர்மனி), மிதிலா (ஜேர்மனி), அபிராமி (ஜேர்மனி), சண்முகேஸ் (பிரான்ஸ்), ஐங்கரன் (பிரான்ஸ்), வைஷாலி (பிரான்ஸ்), தர்மிகா, சாயினி, சுகந்தன் (அவுஸ்ரேலியா), ஜெயந்தன் (கனடா), பிருந்தன் (கனடா), காயத்திரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணிக்கு சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.