மரண அறிவித்தல்
யாழ் கோண்டாவில் நெட்டிலிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகராசா நேற்று முன்தினம் 13.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுக்கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும், சற்குணதேவி காலஞ்சென்ற சகுந்தலாராணி மற்றும் லலிதா (நோர்வே), சந்திரா (நோர்வே), றஞ்சிதமலர் (சுவிஸ்), விஜயகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் , கோணேஸ்வரன், பாலு, யோகேஸ்வரன், நித்தியானந்தன் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சீவரத்தினம் (புத்தளம்), தருமலிங்கம் (கனடா), மற்றும் அமிர்தலிங்கம் (இலங்கை), பரமானந்தன் (சுந்தரலிங்கம் கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 16.09.2019 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கலா (0212215756)
பரந்தாமன் (சுந்தரலிங்கம் சகோதரர் 0769935639)
நெட்டிலிப்பாய் கோயில் வீதி
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்
இடம்
யாழ் கோண்டாவில்
வாழ்ந்த இடங்கள்
யாழ் கோண்டாவில்