Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

” லிங்கநாதன் ”  மீசாலை வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும் 268/1 பலாலி வீதி கந்தர்மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி நாகேந்திரராசா நேற்று 03.09.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற நாகேந்திரராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,  நயந்தா (தொழில்நுட்ப உத்தியோகத்தர் யாழ் பல்கலைக்கழகம்), நர்மதா ஆசிரியை கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி), நக்கீரன் (மின் அத்தியட்சகர் இலங்கை மின்சார சபை), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  யோகேந்திரம் (ஆசிரியர், இணுவில் மத்திய கல்லூரி), தினேஷ்குமார்,  றெபின்சா (சட்டத்தரணி சட்ட உதவியாளர் ஆணைக்குழு, யாழ்ப்பாணம்), ஆகியோரின் பாசமிகு மாமியும், கனகம்மா,  மங்களேஸ்வரி,  பரமசிவம்,  ஆனந்தசிவம், நடராசசிவம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  நாகேந்திரராணி, காலஞ்சென்ற புவனேந்திரராசா மற்றும் இந்திராணி ஆகியோரின் மைத்துனியும்,  எழிலன்,  தீபிகா,  ஆதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 04.09.2019 பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0772830932
268/1 பலாலி வீதி
கந்தர்மடம்
Share This:

இடம்

மீசாலை வடக்கு

வாழ்ந்த இடங்கள்

கந்தர்மடதம்

You may have missed