மரண அறிவித்தல்
கரணவாய் வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கு பூதர்மட ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தவநேசன் நேற்று முன்தினம் 27.08.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துவேலு தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும், விந்துஜா, ஹம்சா, மோகனன், ஆகியோரின் பாசமிகு தந்தையும், வேங்கை, கணேந்திரன், ஆகியோரின் அன்பு மாமனாரும், சாத்விக், ஆத்விக், ரித்விக், அக் ஷதா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும், தவமலர், ஞானேந்திரன், தவஞானம், சிவஞானம் , தவராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், விக்னேஸ்வரமூர்த்தி அவர்களின் உடன்பிறவாச் சகோதரனும், மணிவண்ணன், வெண்ணிலா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், செல்லப்பாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் பெறா மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 29.08.2019 வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நீர்வேலி தெற்கு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0773621388
இடம்
கரணவாய் வடக்கு கரவெட்டி
வாழ்ந்த இடங்கள்
நீர்வேலி தெற்கு