Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

மல்லாகம் வீரபத்திரர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் மகாதனை தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமலிங்கம் கடந்த 14.08.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற குணம் அவர்களின் அன்புக் கணவரும்,  சந்தானகிருஷ்ணன் (Instructor Vavuniya Campus, university of jaffna), உசாந்தினி (அவுஸ்ரேலியா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  காலஞ்சென்ற கந்தசாமி,  சின்னத்தங்கைச்சி,  மற்றும் சண்முகம்,  காலஞ்சென்ற பொன்னுத்துரை,  இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார் காலஞ்சென்ற சுப்பையா,  சின்னம்மா,  யோகேஸ்வரி மற்றும் சிவச்செல்வராணி , சண்முகநாதன் காலஞ்சென்ற சிதம்பரநாதன்,  பரஞ்சோதிநாதன் மற்றும் தனபாக்கியம் ஆகியோரின் மைத்துனரும்,  உமாதேவி காலஞ்சென்ற நகுலேஸ்வரி,மற்றும் கிருஷ்ணமூர்த்தி (மணி), ஆகியோரின் சகலனும்,  நாகேஸ்வரி (பிள்ளை) அவர்களின் பாசமிகு மாமனாரும்,  செல்வராணி, பவளராணி, உசா, உமாசுதன் ஆகியோரின் சிறிய தந்தையும்,  பிறேமா, இளங்கோவன்,  வாமதேவன்,  விஜயராணி,  மதிசுதன், சுரேந்திரன்,  சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,  சைலயன், லிவினியா, வரதன்,  டிராணியா, பிரகதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தெல்லிப்பளை கற்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
குடும்பத்தினர்
Share This:

இடம்

மல்லாகம்

வாழ்ந்த இடங்கள்

தெல்லிப்பளை

You may have missed