Thu. Mar 12th, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும் தும்பளை தெற்கு பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலுப்பிள்ளை மரிய பெர்ணாண்டோ நேற்று  (30.11.2023) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை திரேசம்மா 
தம்பதிகளின் அன்பு மகனும்  காலஞ்சென்ற இராயப்பு மற்றும் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  மேரிவிளிவிக்ரர் (இளைப்பாறிய ஆசிரியர் யா/கலட்டி றோ.க.த.பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,  டியோனி அவர்களின் பாசமிகு தந்தையும்,  கிளிற்றஸ் அவர்களின் அன்பு மாமனாரும், மதுரநாயகம், வேதநாயகம், கிறிஸ்துராஜா, செல்வநாயகம், அரசநாயகம் காலஞ்சென்றவர்களான நீக்கிளஸ் இராசநாயகம்,  பேரின்பநாயகம், மேரி ரோசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் டெவ்னியாவின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி நாளை (02.12.2023) சனிக்கிழமை காலை 11 மணியளவில் கற்கோவளம் புனித செபஸ்ரியார் ஆலயத்தில்
இடம்பெற்று கற்கோவளம் புனித செபஸ்ரியார் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Share This:

இடம்

மானிப்பாய் நவாலி

வாழ்ந்த இடங்கள்

தும்பளை தெற்கு பருத்தித்துறை

You may have missed