Sat. Apr 11th, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு செட்டிச்சோலையை பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் மகாலிங்கம் (சின்னத்தம்பி) அவர்கள் இன்று (03.07.2023) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,  தர்மேஸ்வரியின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்ற கஜேந்திரன் மற்றும் சுரேந்திரன்,  கஜானந்தி (கொழும்பு), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  தனுசா (லண்டன்), கலைவாணி,  சுமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  காலம்சென்ற கனகரத்தினம் மற்றும் செல்லம்மா, அம்பலவாணர்,  தவமணி,  மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  கிருத்தனா, சயந்தனா, டிலக்சன்,  டிசாந்தன் (கொழும்பு), சஞ்சுதன், கேசவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (04.07.2023) செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணியளவில்  அன்னாரின் இல்லத்தல் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக  தம்மளை வைரவர் அடைப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

செட்டிச்சோலை அளவெட்டி வடக்கு

வாழ்ந்த இடங்கள்

செட்டிச்சோலை அளவெட்டி வடக்கு

You may have missed