மரண அறிவித்தல்
நெல்லியடியை பிறப்பிடமாகவும் கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சிவநாதன் அவர்கள் (ஸ்தாபகர் – மருதம் வியாபார நிறுவனங்கள்) இன்று (29-04-2023) அதிகாலை அமரத்துவம் அடைந்து விட்டார்.
அன்னார் நெல்லியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஐயாத்துரை செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்ற நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் அமரத்துவம் அடைந்த கிருத்திகாவின் பாசமிகு கணவரும் கிருஷாந்த், ஜெகன்நாத், துவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ரஜிதா, புஷ்பமீரா ஆகியோரின் அன்பு மாமனாரும் பத்மகநாயகி, தேவராசா, கோமளேஸ்வரி, காலஞ்சென்ற நடேசன், கமலநாயகி மற்றும் கௌரி ஆகியோரின் அன்புச்சகோதரனும், தேவராசா, சிவநாதன், கௌரி, செல்வநாயகி , காலஞ்சென்ற கணேசன் ஆகியோரின் மைத்துனரும் கிருத்திக், திகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
மருதம்
கரவெட்டி மத்தி
கரவெட்டி
இடம்
நெல்லியடி
வாழ்ந்த இடங்கள்
கரவெட்டி