Sat. Apr 11th, 2026
மரண அறிவித்தல்

யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், தற்போது நெல்லியடியை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் கனகராசா அவர்கள் இன்று (27.12.2022) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் பகவதி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற இராஜேஸ்வரி (ஓய்வு பெற்ற தாதி) அவர்களின் அன்புக் கணவரும், தர்மசீலன் (பாபு), காலஞ்சென்ற இராமச்சந்திரன் (பபா), மற்றும் சந்திராவதி, காலஞ்சென்ற தர்மராசா (ஆச்சா), மற்றும் தர்மதுரை (பௌசி), காலஞ்சென்ற தர்மரட்ணம் (ரஞ்சன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயரூபன், காலஞ்சென்ற ஜெயந்தன் (கண்ணன்), மற்றும் கஜந்தன், மயூரன் (கோபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்மலோஜினி, கவிதா, தரணி ஆகியோரின் அன்பு மாமனாரும், கீர்த்தனா, கஜானன், கஜனி, பிரகலாதன், பிருந்தாபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (28.12.2022) புதன்கிழமை தாரிக்கப்பற்று நெல்லியடி கிழக்கு கரவெட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

Share This:

இடம்

மானிப்பாய்

வாழ்ந்த இடங்கள்

நெல்லியடி

You may have missed