மரண அறிவித்தல்
சீமா வளவு அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குலசிங்கம் அவர்கள் இன்று (20.12.2022) செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வசந்தாதேவியின் அன்புக் கணவரும் மற்றும் இராசலட்சுமியின் அன்புச் சகோதரரும், விஜஜா, அகிலன், விஜிதா, மாதவன், திலீபன், ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரதன், விஜித்தா, லிங்கேஸ்வரன், மோகனப்பிரியா, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும், றக்ஷா ரிஷி, ருலக்சன், எழில்வதனன், கஜிந்தன், கனிஸ்கா, கரிஸ், கஜசங்கவி, ஹரிணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (21.12.2022) புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கேணிஸ்முட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
இடம்
அளவெட்டி மத்தி
வாழ்ந்த இடங்கள்
சீமா வளவு அளவெட்டி