Wed. Jul 22nd, 2026
மரண அறிவித்தல்

கருகம்பனையைப் பிறப்பிடமாகவும்,  இளவாலை முள்ளானையை வசிப்பிடமாகவும், தற்போது கந்தானையில் வசித்தவருமான சரவணமுத்து இராஜலிங்கம் (சோமண்ணை) அவர்கள் நேற்று முன்தினம்  (16.04.2022) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான நாகையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,  சுரேஸ்குமார் (சுரேஸ்), சுகந்தினி (சுகா), சுதர்ஜினி (சுகி), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், சின்னராசு, அன்னம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  கம்ஷிகா, சிறிகரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  லதுஷன், ஹரிஷன், அக் ஷஜான், அக் ஷனா, ஆகியோரின் பாசமிகு பேரனும், பத்மாவதி, துரைராஜா, காலஞ்சென்ற பற்குணராசா (முத்துலிங்கம்), விக்கினராஜா, சிறிகாந்தா, ஜெயந்திமாலா, ஜெயக்குமார்,  வசந்தகுமார், காலஞ்சென்ற உருத்திரகுமார், மற்றும் யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (19.04.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கப்புவந்த இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

கருகம்பனை

வாழ்ந்த இடங்கள்

முள்ளானை இளவாலை

You may have missed