மரண அறிவித்தல்
கரணவாய் கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் கலாபூசணம் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள் நேற்று (01.04.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா மீனாட்சி தம்பதியரின் அன்பு மருமகனும், மற்றும் சுசீலாதேவியின் அன்புக் கணவரும், ஜெயகெளரி (ஆசிரியை யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி), ஜெயதர்சினி (முன்னாள் தாதிய உத்தியோகத்தர், போதனா வைத்தியசாலை- தற்போது ஜேர்மனி), ஜெயபாரதி (ஆசிரியை யா/ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வமோகன், (ஆசிரியர் யா/செம்பியன்பற்று அ.த.க.பாடசாலை), சிவசங்கர் (கட்டட ஒப்பந்தக்காரர்), கெளசிகன் (ஆசிரியர் யா/வேலாயுதம் மகா வித்தியாலயம்), ஆகியோரின் அன்பு மாமனாரும், துவாரகன், பவ்யசங்கரி, நிரூஜா, நீரஜா, சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான தங்கமணி, அன்னலட்சுமி, முத்துலட்சுமி மற்றும் சீவரத்தினம், நாகேஸ்வரி, குணரத்தினம், மகாலட்சுமி, ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான விபுதராஜா, சிவபுண்ணியம் மற்றும் பஞ்சரத்தினம், பஞ்சநாதன், பஞ்சலிங்கம் மீனகுமாரி, வதனகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (03.04.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
இடம்
கரணவாய் கிழக்கு, கரவெட்டி
வாழ்ந்த இடங்கள்
கரணவாய் கிழக்கு கரவெட்டி