Mon. May 18th, 2026
மரண அறிவித்தல்

தும்பளையைப் பிறப்பிடமாகவும் நெல்லியடி மற்றும் தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகரத்தினம் ஆனந்தமலர் இன்று  (25.02.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும் மற்றும் கனகரத்தினம் (காந்தி) அவர்களின் அன்பு மனைவியும், ரஜிதா (ஆசிரியை யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி), கனகராஜா (கனெக்ஸ் – உடற்கல்வி ஆசிரியர் யா/ அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி), வரதராஜா (முரளி – நடத்துநர் பருத்தித்துறை இ.போ.ச.) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  நகுலன் (ஆசிரியர் யா/ஏழாலை மகா வித்தியாலயம்), வாணிச்சந்திரிக்கா, உஷாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற நல்லையா மற்றும் தெய்வேந்திரம், ஆனந்தராணி (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சங்கீதம் வடமராட்சி கல்வி வலயம்), ஆனந்தகிளி (ஆசிரியை மணற்காடு றோ.க.த.பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மிதுன், அதிசயன், சோபிதன், விஸ்வா, குருபரன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (26.02.2022) சனிக்கிழமை யாழ்ப்பாணம் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும். செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

தும்பளை

வாழ்ந்த இடங்கள்

நெல்லியடி

You may have missed