Mon. May 18th, 2026
மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் இன்று (30.05.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கனகராயர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  பத்மஜா (ஓய்வு பெற்ற ஆசிரியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,  பவதாரணி அவர்களின் பாசமிகு தந்தையும்,  ஜயப்பிரசாந் (உதவி முகாமையாளர்,  கொமேர்சல் வங்கி,  வெள்ளவத்தை) அவர்களின் அன்பு மாமனாரும்,  சாய் மதுரன், சாய் மஞ்சரி ஆகியோரின் அன்புப் பேரனும்,  காலஞ்சென்றவர்களான அம்பிகாதேவி, கதிர்காமநாதன் மற்றும் ஜெகநாதன் (முன்னாள் சீமெந்து தொழிற்சாலை உத்தியோகத்தர்), தர்மநாதன் (முன்னாள் உத்தியோகத்தர் பிறவுன்ஸ் கம்பனி), தவநாதன் (ஓய்வு நிலை கூட்டுறவு உத்தியோகத்தர்), சிவநாதன் (ஓய்வு நிலை கிராம சேவையாளர்), ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 31.05.2021 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10 மணிக்கு கட்டுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

மலேசியா

வாழ்ந்த இடங்கள்

தெல்லிப்பளை

You may have missed