Mon. Aug 10th, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும் துன்னாலை மேற்கு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணமணி தங்கமணி அவர்கள் இன்று  (05.05.2021) புதன்கிழமை  இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,  காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற குணமணி (சற்குணம் ஸ்ரூடியோ உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,  சுகுணா (ஜேர்மனி) காலஞ்சென்ற சுரேந்திரகுமார் மற்றும் ராஜேந்திரகுமார் (பிரான்ஸ்) ராஜ்குமார் (JSP Photo கிளிநொச்சி), விஜேந்திரகுமார் (பிரான்ஸ்), சுகந்தினி (யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற சுகந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  விக்னேஸ்வரன் (ஜேர்மனி), சுதர்சினி (பிரான்ஸ்), றனிதா (ஆசிரியை யா/ஞானசாரியார் கல்லூரி), மைதிலி (பிரான்ஸ்) அன்ரன் விஜேந்திரா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசமிகு மாமியும்,  பாலசுப்பிரமணியம் கனடா அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான குலமணி, மகாலிங்கம் (கனடா), பேபி சரோஜா மற்றும் சிவபாக்கிலட்சுமி (பிரான்ஸ்) சந்திரசூரியர் (கனடா), கண்மணி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,  தங்கமலர், அன்னலிங்கம், சுசிலாதேவி, றிச்சட் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,  வித்தியாபரன், நிக்கோல், சுஜிவ், குருபரன் (ஜேர்மனி), யாதவ், யானவி, யாத்ரா (பிரான்ஸ்), சரண்யா,  பிரணவி, யதுமிலன் (யாழ்ப்பாணம்), அபிஜித்,  வர்ஷினி, நித்திஸ் (பிரான்ஸ்), நிரோஜ், நிரோஜினி (யாழ்ப்பாணம்), ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (06.05.2021) வியாழக்கிழமை  முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேரோண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
கு.ராஜ்குமார் (மகன்)
Share This:

இடம்

ஆனைப்பந்தி

வாழ்ந்த இடங்கள்

துன்னாலை மேற்கு/பிரான்ஸ்

You may have missed